முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலவொளியில் என் நிழலும் நானும்

 நிழலாடும் நிலவொளியில்,

முடிவில்லாது நீளும் இந்த முன்னிரவில்,

கயிற்றுக் கட்டிலில் உடலிட்டு தலை மட்டும் மெல்ல சாய்க்கிறேன் உன் மடியில்..

அன்றில் சுற்றித்திரிந்த ஜோடிப் புறா ஒன்று, தன் இணையுடன் காதல் கொள்ளும் கீச்சொலி கேட்டு, தலைதூக்கி காண்கிறேன் தென்னங்கீற்றுகள் தாண்டிய பௌர்ணமி கற்றைகளை இழுத்துப் பற்றி பிரதிபலிக்கும் உன் முகத்தை..

மெலிதாய் நாசி நுழையும் மண் வாசம் மனம் வருட,

நாம் விரும்பி தொலையும் புத்தகமொன்றை கையில் கொண்டு, மறுகையால் என் கன்னம் கிள்ளிவிட்டு புத்தகத்தின் முதல் பக்கத்தை புரட்டுகிறாய் நீ..


நாணிய அந்த கன்னங்களில் என் கண்கள் முழுதும் படர விடாது, அடங்காமல் அங்குமிங்கும் ஆடித்திரியும் கூந்தலை உன் காதோரமாய் அடக்கிட முயல்கிறேன் நான்..

கண்கள் ரெண்டும் புத்தகம் விட்டு அகலாது, கழுத்தை மட்டும் ஒருவாறு சாய்த்து சிலிர்த்துக் கொண்டே சிரிப்பை புதைக்கிறாய் நீ..


இன்பமென இன்னும் ஏதேனும் இவ்வுலகினில் உண்டா என்ன? இவ்விரவினில் இதை விடவும்  !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!