முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆழியானவள் அவள் !

அலாதி ஆசைகள் தான் எத்தனை எத்தனை அடி கிடந்தே பழகிப்போன அந்த ஆழ்கடல் நீருக்கு...

எழும்பி மேல் வந்து உச்சி படரும் சூரிய ஒளியை முத்தமிட வேண்டும்..
அலையோடு அலையாய் கவலையின்றி ஆடிட வேண்டும்..
கணத்திற்கு கணம் தலை வருடி முத்தமிடும் காற்றை தீராது காதலிக்க வேண்டும்..
என்னோடு என்னாய் கலந்து போகும் மழையில் நனைய வேண்டும்..
ஆரவாரமாய் ஆர்ப்பரித்து இன்னும் இன்னும் என எல்லையற்று நீள வேண்டும்..
கரை வந்து அழும் அந்த யாரோ‌ ஒருவருக்கு ஆறுதலாய் அவர் கால் தழுவ வேண்டும்..
நண்டுகள் துரத்த வேண்டும்..
பறவைகளை சந்திக்கவேண்டும்..

இப்படி பலவித ஆசைகள் அதற்கு..

இயல்பாகவே இத்தனை தன்மை உடைய நீரை ஆழ்கடலில் அடைத்து போட்டது யாரோ..

அவ்வாறே அவளும்..

அவளையும் எதன் பெயராலும் எதனுள்ளும் அடைத்திடாது அவளை அவளாய விட்டாலே அவளை அவள் காண்பாள், எங்காகினும் யாரிடத்தாகினும் அவளை அவள் மீட்டுக் கொள்வாள்..

ஆழியானவள் அவள்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!