முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னையும் யோசி !

என்னதான் வேண்டும் உனக்கு? உள்ளூர கண்கள் ஊடுருவ என் நேர் நின்று கேட்கிறாய்..

ஒரு போதும் நீ நான் கேட்பதை தரப்போவதில்லை என எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்..

ஏனெனில் இங்கு நீ எனக்காகவென யோசித்ததை விட என்னையன்றி‌ யோசித்த மற்றவைகளின் எண்ணிக்கை மிக அதிகம்..

கண நேரமும் சிந்திக்காது ஒவ்வொன்றுக்கும் காரணங்களை அடுக்கி விட்டு கடமை முடிந்தது என கண்டு கொள்ளாமல் செல்லும் நீ, கண நேமேனும் சிந்தித்திருக்கலாம் காரணங்கள் தாண்டி என்னையும் கொஞ்சம்..

சரி இருக்கட்டும்..

இந்த கணம் ஒரு பட்டாம்பூச்சியாக மாறி
என்னை அணைத்துக்கொள் உனக்குள் இறுதியாக..

கொஞ்சம் எனையும் பறக்க வை உன் வானத்தில்..

பிறகு, உன் விருப்பம் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!