என்னதான் வேண்டும் உனக்கு? உள்ளூர கண்கள் ஊடுருவ என் நேர் நின்று கேட்கிறாய்..
ஒரு போதும் நீ நான் கேட்பதை தரப்போவதில்லை என எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்..
ஏனெனில் இங்கு நீ எனக்காகவென யோசித்ததை விட என்னையன்றி யோசித்த மற்றவைகளின் எண்ணிக்கை மிக அதிகம்..
கண நேரமும் சிந்திக்காது ஒவ்வொன்றுக்கும் காரணங்களை அடுக்கி விட்டு கடமை முடிந்தது என கண்டு கொள்ளாமல் செல்லும் நீ, கண நேமேனும் சிந்தித்திருக்கலாம் காரணங்கள் தாண்டி என்னையும் கொஞ்சம்..
சரி இருக்கட்டும்..
இந்த கணம் ஒரு பட்டாம்பூச்சியாக மாறி
என்னை அணைத்துக்கொள் உனக்குள் இறுதியாக..
கொஞ்சம் எனையும் பறக்க வை உன் வானத்தில்..
பிறகு, உன் விருப்பம் !!
கருத்துகள்
கருத்துரையிடுக