முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு பொய் போதும்!

எனக்கென நீ உதிர்க்கும் சொற்கள்..

எனக்கென மலரும் உன் இதழோரப் புன்னகை..

எனக்கென நீ சிரமத்தோடு சூடிக்கொள்ளும் அந்த சிறிய ஒப்பனை..

எனக்கென வெளிப்படும் உன் வெட்கம்..

எனக்கென கொட்டிடும் அந்தக் கோபம்..

எனக்கென நீ தந்து போன வலிகள்..

எனக்கென என்பதில் எல்லாம் நீ கஞ்சத்தனங்கள் செய்ததே இல்லை எப்போதும்..

எனக்கென என்பதுனக்கு
அத்தனை சுகம்,
அத்தனை பிரியம்,
அத்தனை பிடித்தம்..

உனக்கென என்பதை எல்லாம் என் எல்லாவற்றோடும் பொருத்திப் பார்த்துக் கொள்கிறேன் நான்..

மீண்டும் மீண்டும் இந்தக் காலம் ஒரு பாடலிலோ, ஒரு பெயரிலோ, ஒரு பேருந்திலோ, ஒரு இரவிலோ உன்னை என்னிடம் சேர்த்து விடுகிறது எனக்கென..

அதே காலம் என்னிடமிருந்து உனக்கென எதுவும் சேர்த்ததா ??

பதில் வேண்டாம்..

ஒரே ஒரு பொய் சொல் அது போதும் இப்போதைக்கு எனக்கென !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!