முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலம்‌ ஒரு நல்ல எழுத்தாளன்..

பொழுது போகாவிட்டாலும்
பொழுதுகள் போய்க் கொண்டு தான் இருக்கின்றன,
போகத்தான் செய்கின்றன..

அலையற்ற ஆற்றில் சலனமே அற்று பயணித்து செல்லுமொரு இலையினைப் போல, முகில் வானின் முகட்டில்
கைகள் அகல விரித்து அசைவே அற்று பயணிக்கும் அந்த வல்லூறைப் போல கடந்து போகின்றன சில பொழுதுகள் ஆதியும் தெரியாமல் அந்தமும் தெரியாமல்..

காலத்தின் கைகளை இறுகப் பற்றி ஓர் அங்குலமேனும் அதை இழுத்து நிறுத்திவிடவோ, ஓயாது ஓடிக்கொண்டே இருக்கும் அதன் கால்களுக்கு எது கொண்டேனும் அரை சாண் அளவிற்கேனும் குழிபறிக்கவோ முடியுமா என்ன நம்மால்?

காலம் ஒரு நல்ல எழுத்தாளன்;
நீயும் நானும் நல்ல வாசகர்கள்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!