பொழுது போகாவிட்டாலும்
பொழுதுகள் போய்க் கொண்டு தான் இருக்கின்றன,
போகத்தான் செய்கின்றன..
அலையற்ற ஆற்றில் சலனமே அற்று பயணித்து செல்லுமொரு இலையினைப் போல, முகில் வானின் முகட்டில்
கைகள் அகல விரித்து அசைவே அற்று பயணிக்கும் அந்த வல்லூறைப் போல கடந்து போகின்றன சில பொழுதுகள் ஆதியும் தெரியாமல் அந்தமும் தெரியாமல்..
காலத்தின் கைகளை இறுகப் பற்றி ஓர் அங்குலமேனும் அதை இழுத்து நிறுத்திவிடவோ, ஓயாது ஓடிக்கொண்டே இருக்கும் அதன் கால்களுக்கு எது கொண்டேனும் அரை சாண் அளவிற்கேனும் குழிபறிக்கவோ முடியுமா என்ன நம்மால்?
காலம் ஒரு நல்ல எழுத்தாளன்;
நீயும் நானும் நல்ல வாசகர்கள்!!
கருத்துகள்
கருத்துரையிடுக