முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் பிரிவு...



என்ன செய்துவிடப் போகிறது ஒரு பிரிவு பெரிதாய் ??

கண்ணெட்டா தொலைவிற்கு தூரம் தள்ளி வைக்கும்..

பேசிக் கொள்ள வேண்டாவென்று வார்த்தைகள் துண்டித்து மௌனத்தில் சிறை வைக்கும்..

கொட்டிடும் மழையில் குடைக்குள்ளே நனைய முடியாதபடி அடைத்து வைக்கும்..





சத்தமேயின்றி முத்தமிட்ட நினைவுகளைக் கிளறிக் காட்டி சத்தம் போட்டு அழ வைக்கும்..

விடியா வானம் பார்த்து விடிய விடிய கதை பேசி கதைத்திட தடை விதிக்கும்..



அவ்வளவுதானே..

காதல் இதுதான் என நாம் கண்டறியும் முன்னரே உன்னுள் கலந்த என்னையும், என்னுள் கலந்திட்ட உன்னையும் இந்தப் பிரிவு என்ன செய்திடப் போகிறது..

இந்தப் பெரும் காதலை இந்தப் பிரிவு என்ன செய்து விடப் போகிறது . .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!