கண்ணெட்டா தொலைவிற்கு தூரம் தள்ளி வைக்கும்..
பேசிக் கொள்ள வேண்டாவென்று வார்த்தைகள் துண்டித்து மௌனத்தில் சிறை வைக்கும்..
கொட்டிடும் மழையில் குடைக்குள்ளே நனைய முடியாதபடி அடைத்து வைக்கும்..
சத்தமேயின்றி முத்தமிட்ட நினைவுகளைக் கிளறிக் காட்டி சத்தம் போட்டு அழ வைக்கும்..
விடியா வானம் பார்த்து விடிய விடிய கதை பேசி கதைத்திட தடை விதிக்கும்..
அவ்வளவுதானே..
காதல் இதுதான் என நாம் கண்டறியும் முன்னரே உன்னுள் கலந்த என்னையும், என்னுள் கலந்திட்ட உன்னையும் இந்தப் பிரிவு என்ன செய்திடப் போகிறது..
இந்தப் பெரும் காதலை இந்தப் பிரிவு என்ன செய்து விடப் போகிறது . .



கருத்துகள்
கருத்துரையிடுக