முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரவிலும் அதன் இசையிலும் நீ !!

நானே சேகரித்து கொண்ட உன் பொருட்கள்,
உன் பரிசுகளாலேயே நிரம்பிப் போன என் அறை அலமாரிகள்,
உன்னிடமிருந்து திருடிக் கொண்ட உன்னுடையதும், நமக்காய் நாம் எடுத்துக் கொண்டதுமாய் பழைய புகைப்படங்கள்‍,
உனக்குப் பிடித்த இடங்கள்,
உன் ரிங்டோன்,
உன் உடை வாசம்,
உன் பெயர் என இவையேதும்
உனை நினைவுபடுத்தினால்
கூட பரவாயில்லை எனக்கு..

யாரோ யாரையோ நினைத்து
எழுதி வைத்த பாடல் வரிகளுக்கும்,
எவரோ எதற்கோ மீட்டிய
வயலினுக்கும், பியானோவுக்கும்
இரவெல்லாம் உனை நினைத்து உறக்கமின்றி தலையணை நனைய
நான் கண்ணீர் வடிப்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை எனக்கு !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!