முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாரோ போல் நீ !



உன்னைப் பார்த்துவிட்டு யாரோ போல்
கடந்து செல்லும் கணங்களில் எல்லாம்,
முன்பு ஒருமுறை அதே சாலையில் என் கை விரல்களை
நீ இறுக கோர்த்த போது துடித்ததை விட
இருமடங்காகிறது இதயத்துடிப்பு..

இப்போது
பற்றிக்கொள்ள,
ஊடல் கொள்ள,
மகிழ்நதிருக்க,
கதறியழ
என்னிடம் எஞ்சியிருப்பதெல்லாம்
உன் நினைவுகள் மட்டுமே..

முதலும் இறுதியுமாய்
உன்னை மறந்து போக முடிவெடுத்து
நான் உறங்கச் சென்ற
மிக நீண்ட இரவுகளை எல்லாம்
கடந்து செல்ல நான் பட்ட
பெரும்பாடு யாதென்பதை
நீ அறிவாயா ?

தட்டப்படும் கதவுகள் அனைத்தும் திறப்பதில்லை,
கேட்கப்படும் அன்பு எல்லோரிடத்திலும் கிடைப்பதில்லை..
ஆனால் சிலுவைகள் மட்டும் காத்திருக்கின்றன,
இப்படியான நினைவுகளை சுமந்து செல்ல !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!