நிழலாய் போனவை பல..
நிழலாய் போன எழுத்துக்களுக்குநிறமூட்ட நினைத்தால்
காலம் அனுமதிப்பதில்லை..
வண்ணங்கள் பல இருந்தாலும்
கருப்பு வெள்ளை கண்களுக்குள்
அடங்கிப் போகும் அவையாவும்..
அடங்கிப் போன வண்ணங்கள் யாவும்
வெளியேற முற்படுவதில்லை..
இதயவாசல் வந்த பல சொற்களுக்கு
இதழ்வழி படியேற வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை..
படிதாண்டா சொற்கள் படியேறினால்
பல உறவுகள் நம் படியேறப்போவதில்லை..
முகமூடி அணிந்த முகங்களெல்லாம்
உண்மை முகம் காட்டுவதில்லை..
உண்மைமுகம் கண்டால்
தீண்ட முற்படுவதில்லை காற்றும் கூட..
உயர்ந்த உள்ளங்கள் என்றும்
துயரங்களுக்கு தலைசாய்வதில்லை..
துயரங்களுக்கு தலைசாய்ந்தால்
உயரம் தொட நேரமில்லை..

கருத்துகள்
கருத்துரையிடுக