அடிமனதின் ஆழம் தாங்காது
மேலெழும்பி வரும் என் மன்றாடல்களையெல்லாம்
ஒட்டுமொத்தமாய் ஒரு வார்த்தை விடாது கொட்டி எழுதி முடித்து,
அதை கண்ணாடிக் குப்பி ஒன்றிலிட்டு
கடலில் வீசியெறிந்து விட்டேன்..
எங்கோ தொலை தூரத்திலிருக்கும்
உன்னை அது வந்து சேரும்,
நீ எனை மீட்க வருவாயென நம்பி
இந்த தனித்தீவில்
அமர்ந்திருக்கிறேன் தனியாக..
இங்கு பச்சை விளக்கு ஒளிரும்போதெல்லாம்
என் மீட்புக் கப்பல் வந்துவிட்டதாக
எண்ணிக்கொண்டு எட்டிப் பார்த்து
பின் ஏமாந்து போகிறேன்..
இருந்தும் இன்னமும் கொஞ்சம் நம்பிக்கையோடு மீண்டும் பார்க்கிறேன்,
பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்..
இதோ என் தீவும் மூழ்கத் துவங்கிவிட்டது
மெது மெதுவாக..
எத்தனை முறை விளக்கு ஒளிர்ந்தாலும்
என் கண்ணாடிக் குப்பியில் மட்டும் அந்த
எழவெடுத்த Blue tick விழுவதாக இல்லை !!
கருத்துகள்
கருத்துரையிடுக