இந்தியோ சமஸ்கிருதமோ இன்னும் வேறேதோ, எனக்கு வேண்டின் நான் அறிந்து கொள்கிறேன்..
புல்லோ, புலாலோ புசிப்பது எதுவாயினும் என் நா விரும்புவதை நான் உண்டு கொள்கிறேன்..
கறுப்போ, காவியோ கண் காணா கடவுள் வேறாருமோ, எனக்கு நம்பிக்கை இருப்பதை நான் தரித்துக்கொள்கிறேன்..
இவ்வளவு எளிது, இத்தனை எளியது தான் இந்த வாழ்க்கை..
உள்ளது எதுவும் உனக்கு வெறுப்பாகின்,
நீ வாழ விழையாதிருப்பின் செத்தொழி..
நான் கொண்டாடித் தீர்த்துக் கொள்கிறேன், உன் காலத்தையும் சேர்த்து !!
கருத்துகள்
கருத்துரையிடுக