உனக்கான அன்பின் ஒரு சொல்லை
இதயத்தின் அடியாழத்திலிருந்து
எடுத்து பிய்த்து வைத்தாலன்றி
உனக்கான இந்த கடிதம் நிறைவுறாது..
குடித்துத் தீரா அந்தக் கடலை பாட்டில் ஒன்றில் அடைத்து வைக்கப் பார்க்கிறேன் நான்..
மேலும்,
முற்றுப்புள்ளியிட வேண்டிய இடங்களில் எல்லாம் என் கண்ணீர்த்துளி ஒன்றினை
நீந்த விடுகிறேன் !!
கருத்துகள்
கருத்துரையிடுக