முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைவுகள் மட்டும் நகராமல் !!

பார்த்தாயா இந்தக் காலம் தான் எவ்வளவு வேகமாய் நகர்கிறது, அதுவும் நம்மை இழுத்துக்கொண்டே..

நெற்றி சறியும் நரைமுடி ஒதுக்கும் காலத்திற்கு வந்துவிட்டாய் நீ..
கண்ணாடியின்றி பொடி எழுத்துக்களை தடவத் தொடங்கி விட்டேன் நான்..

ஆனாலும் பாரேன்,

நினைவோடையில் மிதக்கும் அந்த காட்சி மட்டும் இன்னும் இளமை ததும்ப அப்படியே நிற்கிறது..

அதில் எப்போதும் ஒருவன் இன்னமும் தரை தேய bell bottom அணிந்து கொண்டு ஒய்யாரமாக நிற்கிறான்..
அவனைக் கண்டும் காணாதது போலவே அந்த ஒருத்தி எப்போதும் தரையோடு விரல் தேய, தலைமயிர் கோதியபடி நிற்கிறாள் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!