முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எப்போது வருவாய் நீ !!

எப்போது
வருவாய் நீ ??

விழிகளில் நீர் தளும்ப யாரிடமோ தொலைபேசியில் இதே கேள்வியை
திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்..

நானோ, பிறரோ கவனிப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட எந்த அவகாசமும் இல்லை அவளுக்கு..

எப்போது வருவாய்..
எனக் கேட்பதைக் தவிர இக்கணம் அவளுக்கு
இந்த உலகத்திடமிருந்து
தெரிந்துகொள்ள எதுவுமே இல்லை..

அவள் பிடிவாதமாக இருந்தாள்..
மன்றாடுதலுடன் இருந்தாள்..
அந்தக் கூட்டத்திலும் தனிமையாக இருந்தாள்..
எந்தக் கணமும் உடைந்து அழக் கூடியவளாக இருந்தாள்..

எத்தனை யுகங்களாய்
இதே குரலில்,
இதே ஏக்கத்தோடு,
இதே கண்ணீருடன்,
இதே கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்று தெரியவில்லை..
வர வேண்டிய அந்த யாரோ ஒருவர் வராமலேயே இருந்துக் கொண்டிருக்கிறார் இன்னமும் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!