அவள் மடியில் நானும், என் மடியில் அவளும் சாய்ந்து கொண்டு ஊர் கதை, உலக கதை எனப் பேசுவதில் கிழவன், கிழவி ஆனோம்..தலையணைக்கு அடித்துக் கொள்கையிலும், WWE என Smacks போட்டுக் கொள்ளும் போதிலும் குழந்தைகள் ஆனோம்..இது தான் நானென்று நான் சொல்லும் முன்னே, அனைத்தும் அறிந்து நடக்கையில் அவளும்,சீரியஸாய் எதும் பேசும் போதிலும் நடுவே சில்மிஷங்களில் செல்லம் கொஞ்சி கோபம் கரைக்கையில் நானும் காதலி, காதலன் ஆனோம்..சிரித்து பேசி சீட்டாட்டம் ஆடுகையிலும், ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டே பயந்தவாறு பேய் படம் பார்க்கையிலும் நண்பர்கள் ஆனோம்..வாழ்க்கையில் அடுத்த நிலை என்ன என்று தவித்துத் திணறும் தருணங்களில் அறிவுரைகள் தரும் ஆசான்கள் ஆனோம்..தலைகோதி நெற்றியில் முத்தம் வைத்து தூங்க வைத்துக் கொண்ட தருணம் கணவனும், மனைவியும் ஆனோம் !!
வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!
கருத்துகள்
கருத்துரையிடுக