முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயல்ல நான் !!

நீயல்ல நான்,
நீங்கிச் சென்ற பின்னும் நினைவுகளால் ஏங்க வைப்பதற்கு..

நீயல்ல நான்,
நகர்ந்து சென்று பிரிந்த பின்னும் உயிர் தகர்த்தி விழச் செய்வதற்கு..

நீயல்ல நான்,
நித்தம் ஏதோ ஒன்றின் சாயலில் வந்து நிகழ் கணத்தை உறையச் செய்வதற்கு..

நீயல்ல நான்,
விலகிய பின்னும் உன் எல்லா கவிதைகளிலும் ஓரமாய் ஒளிந்து வாழ்வதற்கு..

நீயற்ற அந்த நானால் இவையெல்லாம் உனக்கும் நிகழ்ந்திருக்குமாயின்,

மன்னித்து விடு இந்த என்னை !!


                                                                             ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!