நீயல்ல நான்,
நீங்கிச் சென்ற பின்னும் நினைவுகளால் ஏங்க வைப்பதற்கு..
நீயல்ல நான்,
நகர்ந்து சென்று பிரிந்த பின்னும் உயிர் தகர்த்தி விழச் செய்வதற்கு..
நீயல்ல நான்,
நித்தம் ஏதோ ஒன்றின் சாயலில் வந்து நிகழ் கணத்தை உறையச் செய்வதற்கு..
நீயல்ல நான்,
விலகிய பின்னும் உன் எல்லா கவிதைகளிலும் ஓரமாய் ஒளிந்து வாழ்வதற்கு..
நீயற்ற அந்த நானால் இவையெல்லாம் உனக்கும் நிகழ்ந்திருக்குமாயின்,
மன்னித்து விடு இந்த என்னை !!
...
கருத்துகள்
கருத்துரையிடுக