முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாடகை வீடு

இதனோடு சேர்த்து பத்தாவது வீடு எங்களுக்கு..

முன்பிருந்த வீடுகளின் சாயலில் தான் இந்த வீடும் இருக்கிறது..
குழப்பத்தில் அதிர்ஷ்டம் எந்த வீட்டின் கதவுகளை தட்டியதோ தெரியவில்லை..

வாடகை ஏற்றத்தால்,
வேலை மாற்றத்தால்,
உயர் படிப்பு நோக்கத்தால்,
ஆணி அடித்ததால்,
அடுப்பங்கரை சுவற்றில்
படிந்து போன புகையால் என
மாறுபடுகின்றன வீடுகள்,
மாற்றலுக்கான சூழல்களும்..

கரித்துண்டில் கிறுக்கி
கணக்கு படித்தது ஒரு வீடு..
பக்கத்து வீட்டின் மரம் ஏறி மாங்காய் திருடி மாட்டிக் கொண்டது மறு வீடு..
வண்டியோட்ட கற்றுக்கொள்வதாய்
முழங்கால் முழுதும் தேய்ந்து
முடங்கிக் கிடந்தது,
இறுதியாக உடனிருந்து இல்லாமல் போனவனின் இருமல் சத்தம் விட்டு விட்டு ஒலித்தது என ஒவ்வொன்றும் ஒரு வீடு‌..

விவரமறிந்த நாளிலிருந்து
விட்டுப் பிரிந்தது ஏராளம்..
அத்தனைப் பொருளையும்
வாகனத்தில் ஏற்றிய பின் அதன் உச்சியில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வீட்டில் இருந்தும் கையசைத்து அழைப்பேன் வரமாட்டேன் என 
வம்பிழுக்கும் நினைவுகள் மட்டும் . .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!