யாருடனாவது பேச வேண்டும்.
போலிருக்கிறது..
திடீரென சில சமயங்களில் மனமொரு நீர்ச்சுழலென மாறிவிடுகிறது..
காரணம் ??
கடந்து போன கணம் வரை கண்டறியப்படவில்லை..
யாருடனாவது பேசினால் சுழலில் சிக்காமல் இருக்கலாம் எனத் தோன்றுகிறது..
சரி.. ஆனால் யாருடன் பேசுவது ??
என்னுடன் பேச யாருமில்லை என்றெல்லாம் சொல்லிடவியலாது..
தொட்டுவிடும் தூரத்தில், தொலைத்தொடர்பில் என என்னைச் சூழ்ந்திருப்போர் எத்தனையோ பேர் இங்குண்டு..
ஆனாலும் ஏனோ என்னுள் ஓர் அற்ற நிலை..
அப்படியே பேசினாலும் என்ன பேச ??
மௌனம்..
அது மட்டுமே மனதை ஓசைகளின்றி ஊசலாட்டும்..
சில நேரங்களில் அப்படித்தான் இருக்கிறது..
எவ்வளவோ சிந்தித்தும் என்னவென்றே புரியவில்லை எனக்கும்..
நடுக்கடலில் அலைகளின் தாளங்களுக்கு ஏற்ப ஆடும் கப்பல், அது எந்த மரக்கிளையின் மீதேறி தன்னை மீட்டுக்கொள்ள இயலும்..
தானே தான் மிதந்தேறி கரை வந்தடையும்..
அவ்வாறே நானும்..
ஆனாலும் கூட,
யாருடனாவது பேச வேண்டும் போலிருக்கிறது . .
கருத்துகள்
கருத்துரையிடுக