முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாருடனாவது பேச வேண்டும். போலிருக்கிறது !!

யாருடனாவது பேச வேண்டும்.
 போலிருக்கிறது..

திடீரென சில சமயங்களில் மனமொரு நீர்ச்சுழலென மாறிவிடுகிறது..

காரணம் ??
கடந்து போன கணம் வரை கண்டறியப்படவில்லை..

யாருடனாவது பேசினால் சுழலில் சிக்காமல் இருக்கலாம் எனத் தோன்றுகிறது..

சரி.. ஆனால் யாருடன் பேசுவது ??

என்னுடன் பேச யாருமில்லை என்றெல்லாம் சொல்லிடவியலாது..
தொட்டுவிடும் தூரத்தில், தொலைத்தொடர்பில் என என்னைச் சூழ்ந்திருப்போர் எத்தனையோ பேர் இங்குண்டு..

ஆனாலும் ஏனோ என்னுள் ஓர் அற்ற நிலை..

அப்படியே பேசினாலும் என்ன பேச ??

மௌனம்..
அது மட்டுமே மனதை ஓசைகளின்றி ஊசலாட்டும்..

சில நேரங்களில் அப்படித்தான் இருக்கிறது..

எவ்வளவோ சிந்தித்தும் என்னவென்றே புரியவில்லை எனக்கும்..

நடுக்கடலில் அலைகளின் தாளங்களுக்கு ஏற்ப ஆடும் கப்பல், அது எந்த மரக்கிளையின் மீதேறி தன்னை மீட்டுக்கொள்ள இயலும்..
தானே தான் மிதந்தேறி கரை வந்தடையும்..

அவ்வாறே நானும்..

ஆனாலும் கூட,
யாருடனாவது பேச வேண்டும் போலிருக்கிறது . .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!