அந்த ஒரே மரம் மட்டும் தான், அந்த சாலையில் இருந்தது..
ஆள் நடமாட்டமும் இல்லை, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில்..
தூறல் எல்லாம் தான் தாங்கி,
தனக்குக் கீழ் ஒதுங்கிய அந்த இருவருக்கும் இதத்தை தந்தது அம்மரம்..
மழைக்கால இருட்டு,
மங்கிய வெளிச்சம்,
ஆடை நனைக்கும் இதமான தூறல்
சொல்லவா வேண்டும்,
இருவரும் காதலில் தங்களை மறந்து லயித்துக் கொண்டிருந்தனர்..
மரத்தை சுற்றிச் சுற்றி ஓடுவதும்,
மாறி மாறி டூயட் பாடுவதும்,
உதடுகள் உரச கவிதை பரிமாறிக் கொள்வதும் எனக் கார்மேகக் காலத்தை கவிதையாக்கிக் கொண்டிருந்தனர்..
இப்போது தான் ஏழு வயது தொட்டிருக்கும் இருவருக்கும்..
இந்த வயசுக்கு இது கூட இல்லையென்றால் எப்படி..
மழை நின்றது ஒரு வழியாக..
கிளம்பிவிட்டார்கள் இருவரும்,
வழக்கம் போல புற்க்களை மேய !!
கருத்துகள்
கருத்துரையிடுக