முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழையில் அந்த மரத்தின் அடியில் !!

அந்த ஒரே மரம் மட்டும் தான், அந்த சாலையில் இருந்தது..
ஆள் நடமாட்டமும் இல்லை, கண்ணுக்கெட்டிய தூரம் வரையில்..

தூறல் எல்லாம் தான் தாங்கி,
தனக்குக் கீழ் ஒதுங்கிய அந்த இருவருக்கும் இதத்தை தந்தது அம்மரம்..

மழைக்கால இருட்டு,
மங்கிய வெளிச்சம்,
ஆடை நனைக்கும் இதமான தூறல்
சொல்லவா வேண்டும்,
இருவரும் காதலில் தங்களை மறந்து லயித்துக் கொண்டிருந்தனர்..

மரத்தை சுற்றிச் சுற்றி ஓடுவதும்,
மாறி மாறி டூயட் பாடுவதும்,
உதடுகள் உரச கவிதை பரிமாறிக் கொள்வதும் எனக் கார்மேகக் காலத்தை கவிதையாக்கிக் கொண்டிருந்தனர்.. 

இப்போது தான் ஏழு வயது தொட்டிருக்கும் இருவருக்கும்..
இந்த வயசுக்கு இது கூட இல்லையென்றால் எப்படி..

மழை நின்றது ஒரு வழியாக..

கிளம்பிவிட்டார்கள் இருவரும்,
வழக்கம் போல புற்க்களை மேய !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!