முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானும் தனிமையும் !!

சுற்றிலும் நான்கு சுவர்,
அடைக்கப்பட்ட சாளரங்களும், கதவும்..

உத்திரத்தில் ஓயாது ஓடும் மின்விசிறி, மன ஓட்டத்தைத் தாண்டி செவிகளில் அதன் இரைச்சல், நிறுத்திவிட்டேன்..

நிற்க நேரமின்றி எங்கோ விறுவிறுப்பாக நடந்து கொண்டே இருந்தது கடிகாரம், பேட்டரியை கழற்றி வீசிவிட்டேன்..

ஏதோ ஒரு மூலையில் என்னைப் பார்த்து எகத்தாளமாய் சிரித்தபடி ஒளிரும் அலைபேசி,
திரையில் தெரிவது உன் பெயர் இல்லையெனினும் திராணியற்று நகர்கிறேன் அதை நோக்கி..

வீம்பாகவே இருக்கிறேன் அல்லது முயல்கிறேன்,
இருப்பினும் அவ்வப்போது திறந்துக் கொள்ளும் கண்களின் குழாய்களை மூட பதினோராவதாய்‌ உன் விரலின்றி சிரமப்படுகிறேன்..

இருந்தும் இப்போது தான் நிம்மதியாய் இருக்கிறோம் என்பதாய் ஓர் உணர்வு,
நானும்,
நீ தந்து போன இத் தனிமையும் !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!