சில நூறு கவிதைகளுக்குப் பிறகு
வறண்ட பாலைவனமாய்
தெரிகிறது மனம்..
அத்தருணத்தில்
கடந்து செல்கிறாள்
அரக்கு நிறப்புடவை அணிந்த பெண்ணொருத்தி..
அடை மழையாய் கொட்டித் தீர்த்தது
ஓராயிரம் கவிதைகள்..
பின் உணராமல் என்ன செய்யும்
இக்கவிஞன் மனம்,
பெண் இருக்கும் வரை எல்லாம்
பெருங்கவிதைகள் வாழுமென !!
கருத்துகள்
கருத்துரையிடுக