முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் இருக்கும் வரை !!

சில நூறு கவிதைகளுக்குப் பிறகு
வறண்ட பாலைவனமாய்
தெரிகிறது மனம்..

அத்தருணத்தில்
கடந்து செல்கிறாள்
அரக்கு நிறப்புடவை அணிந்த பெண்ணொருத்தி..

அடை மழையாய் கொட்டித் தீர்த்தது
ஓராயிரம் கவிதைகள்..

பின் உணராமல் என்ன செய்யும்
இக்கவிஞன் மனம்,
பெண் இருக்கும் வரை எல்லாம்
பெருங்கவிதைகள் வாழுமென !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!