முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாட்டூ போட ஆசைதான் !!

புதிதாய் மலர்ந்த ஒரு சிவப்புப் பூ பச்சைக் குத்தியிருந்தது பாட்டியின் கைகளில்.. குத்திய நினைவு இல்லை கொஞ்சம் கூட அவளுக்கு!

எப்போதோ செத்துப்போன தன் நாய்க்குட்டியின் பெயரை பச்சை குத்தியிருக்கிறான் என் நண்பனொருவன்..

காதோரமாய் மறையும்படி காதலன் பெயரை குத்தியிருந்த தோழி,
பிறகு அது அர்த்தமற்று‌ போற பெயரை பட்டாம்பூச்சி ஆக்கி விட்டாள்..

சாதுவான சக தொழிலாளி ஒருவன் கைகளில் முழங்கை வரை பெரிதாய் கழுகு ஒன்று கொடூரமாய் பார்த்தபடி..
கேட்டால் பார்த்த உடன் எல்லோருக்கும் பயம் வரணுமாம்!

எனக்கும் கூட ஆசைதான் எதையாவது டாட்டூ போட்டுக்கொள்ள..
அந்த அளவுக்கு பிடித்த விஷயம் தான் இன்னும் தெரியவில்லை, கிடைக்கவுமில்லை !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!