முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இவை போதாதா !!

அடித்தொண்டை விரிய அண்ணாந்து பார்க்கையில் எல்லாம் வசீகரிக்கும் அந்த வானம்,
ஆளற்ற இந்த மாடிவெளியில் நானும் என் நாய்க்குட்டியும்,
அங்குமிங்கும் புத்தகத்தாளை புரட்டிப்போட்டு விளையாடும் காற்று, அமர்வதும் பறப்பதுமாய் அங்குமிங்கும் வட்டமடித்துக் கொண்டே ஒலியெழுப்பும் பறவையொன்று,
குடித்து முடித்து பாதி காய்ந்த குளம்பிக் குவளை,
கைநிறைய கொள்ளா அளவு கவிதை,
இசையால் இதயம் நிறைக்க ராஜாவின் கீதம்,

போதாதா இவை?

எப்போதும் உடன் பயணித்து உள்ளம் கிளறிப் பார்க்கும் இந்த வெறுமையை விரட்டியடிக்க !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!