முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கந்து வட்டி யார் கட்ட ??

பல்லாங்குழி ஆடயில
ஆடையில ரத்தமுன்னு
வீட்டோட அடச்சிட்டாளே
என்னப் பெத்த என் ஆத்தா..

பனையோலை பங்களால
பத்திரமா புடிச்சு வச்சு
போட்டோவுக்கு சிரிக்கச் சொல்லி
அதட்டுனாளே அத்தைக்காரி..

என் வயசு சிருக்கியெல்லாம்
பள்ளிக்கூடம் போகையில
எம்மனசு நொந்த கதை
எங்க போயி நாஞ்சொல்ல..

கல்யாணம் வேணாம்னு
கண்ணீரோட நான் கெஞ்ச,
அந்த அருவாளு அய்யனாரும்
அதை காது குடுத்து கேக்கலையே கொஞ்சங்கூட..

சிரிக்கவே தெரியாத ஒரு
சிடுமூஞ்சி ஆம்பிள.
எனக்குன்னு எங்கப்பன்
பாத்து வச்ச மாப்பிள்ளை..

சீதனமா வாங்கி வந்த சாமான் எல்லாம்
என் புருசன் சரக்கடிச்சே
சேட்டுக்கடை போயி சேந்துருச்சு..

மஞ்சளுல மின்னுன
என் கன்னம் ரெண்டும்
மருதாணியா செவந்துருச்சு
வாக்கப்பட்ட மனுசன் கிட்ட
நான் வாங்குன அடி கண்டு..

கள்ளிக்காட்டுக்குள்ள பூத்த
கமலமலர் மாதிரி
வயித்தில் வந்து தரிச்சானே
என் மவன் கருவாயன்..

சட்டி சட்டியா கள்ளச்சாராயம்
குடிச்சதாலோ என்னவோ
சட்டுனு போய் சேந்தான்
என் புருசன் மகராசன்..

என் புருஷன் போய்ட்டானு
சோகத்துல நான் கெடந்தா
கருமாதிக்கு வாங்கி வச்ச
கந்து வட்டி யார் கட்ட ??

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!