நீ தான்..
நீயே தான்..
நிச்சயம் அது உன் குரலே தான்..
அருவிகளுக்கு இடையில்,
அதிரும் ஆளற்ற நெடுஞ்சாலைகளில்,
ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசையில்,
பெருமழைக்குப் பிறகு வீசும் சாரலில்,
திருவிழாக் கூட்டத்தின் நடுவில்,
மனிதர்களை வெறுத்த பெரும்பாலான கணங்களில்,
நாம் சென்று வந்த இடங்களில்,
அனாதி தனிமையில்,
பாதி உறக்கத்தில்
யாருமே அறியாது, என் உயிருக்கு மட்டும் கேட்கும்படி அழைக்கிறாய்..
தயவுசெய்து சொல்..
எங்கிருக்கிறாய் நீ ??
கருத்துகள்
கருத்துரையிடுக