முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீ மட்டுமே !!

சின்னதாய் ஒரு புன்னகைக் கூட எனக்கென்று நீ செய்யாத போதும், 

அங்கு நான்‌ நிற்பதை அறிந்தும் அறியாதது போல் என்னை நீ கடந்து சென்று விட்ட போதும்,

இன்னமும் என் காதல் மொத்தமும் உன் மீதே என்பதால், பைத்தியக்காரி என்கிறது என்னை இச்சமுதாயம்..

நீ அன்றே சொன்னது தான் நான் பைத்தியக்காரி என்று,
இப்போது தான் தெரிந்திருக்கிறது இவர்களுக்கு..

இப்போதாவது உனக்கு புரிகிறதா ?? எப்பொழுதும் என்னை முழுமையாகப் புரிந்தவன் நீ.. நீ மட்டுமே !!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!