சின்னதாய் ஒரு புன்னகைக் கூட எனக்கென்று நீ செய்யாத போதும்,
அங்கு நான் நிற்பதை அறிந்தும் அறியாதது போல் என்னை நீ கடந்து சென்று விட்ட போதும்,
இன்னமும் என் காதல் மொத்தமும் உன் மீதே என்பதால், பைத்தியக்காரி என்கிறது என்னை இச்சமுதாயம்..
நீ அன்றே சொன்னது தான் நான் பைத்தியக்காரி என்று,
இப்போது தான் தெரிந்திருக்கிறது இவர்களுக்கு..
இப்போதாவது உனக்கு புரிகிறதா ?? எப்பொழுதும் என்னை முழுமையாகப் புரிந்தவன் நீ.. நீ மட்டுமே !!
கருத்துகள்
கருத்துரையிடுக