இனம்புரியாத வேதனையொன்று இதயத்தினூடே ஏதோ செய்கிறது..
இன்னதென்றே விளங்காத அது
சோற்றுருண்டையில் சிக்கிய முள்ளாய் உள்ளூர உறுத்திக் கொண்டேயிருக்கிறது..
எவருமற்று தனித்துப் போன இவ்விரவில் தூக்கமற்று இருளில் தேடி துழாவுவது எல்லாம் உன் கைகளையே..
இனி எப்போதும் எனக்கென்று இல்லாது போன, எவ்வளவு தேடினும் அகப்படா அவை மட்டுமே போதுமாயிருக்கிறது எனக்கு..
என்ன செய்ய, நீயற்ற தனிமையிலும் கூட என் துணையிருப்பது நீ மட்டுமே !!
கருத்துகள்
கருத்துரையிடுக