கிணறு ஒன்றை எட்டிப் பார்க்க எண்ணினால் அதற்கான மூன்று விதிகள்..
முதலில் எட்டிப் பார்க்கும்போது தவறி உள்ளே விழுந்து விடாதிருப்பது முக்கியம்..
அப்படியே விழுந்து விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக அக்கிணறு உங்களை விழுங்கி விடுவதற்குள் சுதாரித்துக் கொண்டு வெளிவந்து விடுவது இரண்டாவது விதி..
முக்கியமானதும் மூன்றாவதும் அதை உற்று பார்க்கும்போது உண்டாகும் காட்சி மயக்கத்தில் உங்களை நீங்கள் இழக்காமலிருத்தல் மிக மிக அவசியம்..
அன்பு செலுத்துவதற்கான மூன்று விதிகளும்
அவையேதான் !!
கருத்துகள்
கருத்துரையிடுக