ஒருத்தி உங்களை ஏற்றுக் கொண்டாள் அல்லது நிராகரித்தாள் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல எப்போதும்..
உலகில் உங்கள் இருப்பு அழிந்த பின்னும், உங்களுக்கென்று சொல்லிட ஒரு காதலேனும் சம்பாதித்துக் கொள்ளுங்கள்..
அதில் உங்களை தொலைத்து, பித்தாகி சித்தம் தொலைத்தாலும், உங்களுக்காக ஒருத்தி இருந்ததையும், அப்படி அவள் உலகத்தில் நீங்கள் இல்லாது போனாலும், உங்கள் உலகமாய் அவள் மட்டுமே இருந்ததை உங்கள் காதலாய் சொல்லிச் செல்லுங்கள்..
உங்களுக்கானவள் இன்னும் வராமல் இருக்கலாம், நீங்கள் அவளை இன்னும் அந்தளவிற்கு காதலிக்காமல் இருக்கலாம் அல்லது எங்கோ ஒரு மூலையில் உங்களைப் போலவே அவளும் என்னவன் எங்கேயோ என ஏங்கிக் கொண்டும் இருக்கலாம்..
ஏதோ ஒரு தருணத்தில் அந்த உண்மைக் காதல் உங்களையும் தொடுமாயின், உங்கள் அருகிலும் ஒருத்தி அமர்ந்து கொண்டு, கண்களில் காதலை தேக்கி வைத்துக் கொண்டு ஓயாது சண்டை பிடித்தாலும் அலுக்காது ஆயிரம் முறை கூட கேட்பாள், 'என்ன உனக்கு எவ்ளோ பிடிக்கும்'
ஒரு காதல் கதையைக் கூட கொண்டிருக்காத வாழ்வெல்லாம் என்ன வாழ்வு !!
கருத்துகள்
கருத்துரையிடுக