நெடுங்காலமாக குளம் ஒன்று இருந்தது எங்கள் ஊரில்..
தலைமுறைகள் பல பார்த்தவர்களுக்கு கூட
தெரியவில்லை, அது உருவாகிய காலம் எதுவென்று..
பின் காலத்தின் போக்கில் மரமெல்லாம் விறகாகிட, வரப்பெல்லாம் விலை போய்விட, குளமும் மாறிப்போனது ஊர் கூடி நிற்கும் பஸ் ஸ்டாண்டாய்..
பெயருக்குக் கூட அந்த குளத்தின் நீரையே பார்த்திராத தலைமுறைகளும் கூட இன்னமும் அழைக்கின்றன அந்த இடத்தை குளத்து பஸ்டாண்ட் என்றே..
தலைமுறைகள் கடந்தும் இப்படியாக வாழ்ந்து கொண்டு தானிருக்கிறது, பல குளங்கள் காணாமல் போன வரலாறு !!
கருத்துகள்
கருத்துரையிடுக