'தோன்றின் புகழொடு தோன்றுக'
என்ற வள்ளுவன் வாக்கை
மீண்டும் மீண்டும் எவரும் நினைவுப்படுத்தத் தேவையில்லை எனக்கு..
எந்த இதழின் அட்டைப்பக்கத்திலும்
என் படங்கள் இடம்பெறத் தேவையில்லை..
எந்த தொலைக்காட்சி தலைப்புச் செய்தியிலும் நான் வரப் போவதில்லை..
உலகின் சாதனைப் புத்தகங்களில் என் பெயர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை..
இத்தனை பெரிய பூமியில் நானும் சற்றே இருந்துவிட்டு போகிறேனே ஏதோவொரு மூலையில்..
சில இதயங்களின் பாரங்களை இறக்கி வைத்த நினைப்புகள் போதுமெனக்கு எப்போதும் !!
கருத்துகள்
கருத்துரையிடுக