காதல் வழிய எத்தனையோ இரவுகள் கவிதைகள் படித்து கதைகள் பேசி விட்டாயிற்று..
இன்று இரண்டொரு நிமிடங்கள் பேச உனக்கு நேரமில்லாது போனதில் வருத்தமேதும் இல்லையெனக்கு என்றே நினைத்துக்கொள் நீ!!
இருப்பினும் கேட்கிறேன் இன்னொரு முறை இறுதியாக பேசிப் பார்க்கலாம் என,
நீயாய்ப் பேசினால் காதல் அழிக்க காரணங்கள் சொல்லிக் கொண்டிருப்பாய்,
அதனால் நான் பேசவும் சற்று இடம் கொடுத்து மீண்டும் நாமாக வழியென்ன எனப் பேசலாம்..
பேசி முடித்தாயிற்று எனத் தோன்றிய பின் நீயே ஒரு முடிவெடு..
தொலைந்து போனது காதல் தான் என்றால் சொல், காற்றில் தேடி பார்கிறேன்..
உடைந்து போனது இதயம் என்றால் நீ நில், நான் போய்விடுகிறேன் இந்த காற்றோடு..
அமாவாசை வானத்தில் நிலவாய் நீயிருந்தாய் என்னோடு துணையாய்,
இன்று பௌர்ணமி காலத்தில் கூட இல்லாமல் போனதன் காரணம் இன்றுவரை நானறியேன்!!
கருத்துகள்
கருத்துரையிடுக