முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றுவரை நானறியேன்!!

காதல் வழிய எத்தனையோ இரவுகள் கவிதைகள் படித்து கதைகள் பேசி விட்டாயிற்று..

இன்று இரண்டொரு நிமிடங்கள் பேச உனக்கு நேரமில்லாது போனதில் வருத்தமேதும் இல்லையெனக்கு என்றே நினைத்துக்கொள் நீ!!

இருப்பினும் கேட்கிறேன் இன்னொரு முறை இறுதியாக பேசிப் பார்க்கலாம் என,

நீயாய்ப் பேசினால் காதல் அழிக்க காரணங்கள் சொல்லிக் கொண்டிருப்பாய்,
அதனால் நான் பேசவும் சற்று இடம் கொடுத்து மீண்டும் நாமாக வழியென்ன எனப் பேசலாம்..

பேசி முடித்தாயிற்று எனத் தோன்றிய பின் நீயே ஒரு முடிவெடு..

தொலைந்து போனது காதல் தான் என்றால் சொல், காற்றில் தேடி பார்கிறேன்..

உடைந்து போனது இதயம் என்றால் நீ நில், நான் போய்விடுகிறேன் இந்த காற்றோடு..

அமாவாசை வானத்தில் நிலவாய் நீயிருந்தாய் என்னோடு துணையாய்,
இன்று பௌர்ணமி காலத்தில் கூட இல்லாமல் போனதன் காரணம் இன்றுவரை நானறியேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!