துன்பத்தில் ஆதரவாய் பற்றிக் கொள்ளவும்,
பயத்தில் பாதுகாப்பதற்கும்,
மகிழ்ச்சியில் ஆசையோடு கோர்த்துக் கொள்ளவும்,
காய்ச்சல் கண்டாலும், கொடுங்கனவு என்றாலும் மீண்டு வருவதற்கும்,
உலகமே வெறுத்தாலும் மறுத்தாலும் முன்னோக்கி எடுத்துச் செல்லவும்,
இன்னும் இவ்வுலகின் அனைத்தையும் எதிர்கொள்ளவும் உன் கைகள் போதுமாயிருந்தது!
குழந்தைக்கு தாயின் மடியை போல அதுவே என் அடைக்கலமாயிருந்தது!
அதுவே என் மொத்த உலகமுமாயிருந்தது!!
வருடங்கள் பல கழித்து உணர்ச்சிகளற்று பழைய நண்பர்கள் என மற்றவர் முன்னிலையில் கைகள் குலுக்கிக் கொண்ட அத்தருணத்தை,
நீயாவது இல்லை நானாவது தவிர்த்திருக்கலாம் !!
கருத்துகள்
கருத்துரையிடுக