உதிர்ந்து கொண்டிருக்கிறது,
நாட்கள் ஒவ்வொன்றாக!
உதிர தொடங்கி விட்டன,
கனவுகளும் ஆசைகளும் கூட!
எதற்காக இந்த காத்திருப்பு என்றும், எத்தனை காலமென்றும் கூட மறந்து போகலாம் எனக்கு,
அத்தனைக்குப் பின்னும் கூட
நான் காத்து கொண்டே தான் இருக்கிறேன், இருப்பேன்!
இப்போதெல்லாம் பழகிவிட்டது காத்திருப்பு எனக்கு..
வேறு என்ன செய்வதென்று தெரியாது.. தெரிந்ததெல்லாம் அது மட்டுமே இப்போது!
காத்திருக்கிறேன்!!
கருத்துகள்
கருத்துரையிடுக