ஒருத்தியை காதலித்தேன் நான்..
அவளும் காதலித்தாள் என்னை..
நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது எங்கள் காதலும்..
திடீரென சண்டை போட்டாள்,
வம்படியாக என்னைத் தவிர்த்தாள்,
இறுதியாக ஒருநாள் ஏனென்றே தெரியாத ஒரு பிரேக் அப்பை பரிசளித்தாள்..
எவ்வளவோ கெஞ்சினேன்..
எதற்கு பிரேக் அப் என்று
கேட்டு மன்றாடினேன்..
கொஞ்சமும் இரக்கம் காட்டாதவள், க்ரீஸ் டப்பாவை எட்டி உதைப்பது போல் எட்டி உதைத்தாள் என்னையும் என் காதலையும்..
சமீபத்தில் தான் கேள்விபட்டேன்,
அடுத்ததாய் வந்த அவளது காதலன்
அவளை கைவிட்டு விட்டதாக..
காதல் தோல்வியின் வலி புரிந்த நான் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றினேன்..
உடைந்து அழுதாள்,
அவள் கண்ணீர் மொபைல்
வழியாக என் இடது காதில் வடிந்தது..
அவள் அழுகையில் நானும் சோகமானேன்..
என் மனதின் மூலையிலிருந்த சைத்தான் ஒன்று வலது காதுக்குள் வாய் வலிக்க கத்தியது..
அவளிடம் கேள், கேட்டு விடு
என்று கதறியது..
என்னவென்று தெரியுமா?
"ஆமா நீ க்ரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச"
கருத்துகள்
கருத்துரையிடுக