முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜென்சி அக்காவின் அழுகை!!

பிரபா அண்ணாவுக்கு ஜென்சி அக்காவை ரொம்ப பிடித்திருந்ததால், அக்காவுக்கும் அண்ணாவை ரொம்ப பிடித்திருந்ததால்,

கல்யாணத்தின் முதல் நாள் இரவு அக்கா காணாமல் போய் விடுவாள் என்று அம்மாவும் அத்தைகளும் சித்தியும் அவளின் அறையிலேயே காவலர்களாய் மாறிப் போயிருந்தனர்..

இரவெல்லாம் கேட்டு கொண்டே இருந்த அந்த அக்காவின் அழுகையின் இடையே உறங்கி போனேன் நான் புரியாத வயதில்..

இப்போதெல்லாம் உறக்கமின்றி எனக்காக அழும் இரவுகளில், அக்காவுக்கும் சேர்த்தே அழுகிறேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!