முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உன்னிடத்தில் நான்!!

நீ அறியாத கணங்களில் உன்னை ரசிக்கும் பொழுதுகளில் எல்லாம் குட்டி பூனையாகிறேன்!

உன் மடியில் தவழ்ந்து, என்னைத் தழுவா உன் கைகளுக்கு ஏங்கி பின் உன் கொஞ்சல்களில் மயங்கும் தருணங்களில் நாய்க் குட்டியாகிறேன்!

உன் மேனியில் அங்காங்கே துள்ளி விளையாடி, வரிகளால் வர்ணங்கள் செய்யம் பொழுதெல்லாம் அணிலாகிறேன்!

உன் செல்ல அதட்டல்களில் பயம் கொள்ளும் தருணம் அசடுவழியும் ஒரு குழந்தையாகிறேன்!

நீ கோபம் கொண்டு சிவந்து போகையில் எல்லாம், உன்னைக் கொஞ்சி பேசும் கிளியாகிறேன்!

எங்கும் எவரிடத்தும் உன்னை விட்டுக் கொடுக்காது நிற்கும், உனக்காய் இருக்கும் தருணங்களில் உன்னவனாகிறேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!