நீ அறியாத கணங்களில் உன்னை ரசிக்கும் பொழுதுகளில் எல்லாம் குட்டி பூனையாகிறேன்!
உன் மடியில் தவழ்ந்து, என்னைத் தழுவா உன் கைகளுக்கு ஏங்கி பின் உன் கொஞ்சல்களில் மயங்கும் தருணங்களில் நாய்க் குட்டியாகிறேன்!
உன் மேனியில் அங்காங்கே துள்ளி விளையாடி, வரிகளால் வர்ணங்கள் செய்யம் பொழுதெல்லாம் அணிலாகிறேன்!
உன் செல்ல அதட்டல்களில் பயம் கொள்ளும் தருணம் அசடுவழியும் ஒரு குழந்தையாகிறேன்!
நீ கோபம் கொண்டு சிவந்து போகையில் எல்லாம், உன்னைக் கொஞ்சி பேசும் கிளியாகிறேன்!
எங்கும் எவரிடத்தும் உன்னை விட்டுக் கொடுக்காது நிற்கும், உனக்காய் இருக்கும் தருணங்களில் உன்னவனாகிறேன்!!
கருத்துகள்
கருத்துரையிடுக