சாயங்கால நேரம், சாலையில் அடிபட்டு சாகக் கிடக்கிறது குட்டி நாயொன்று..
விட்டால் போதுமென அலுவலகம் விட்டு வீடு போய் சேரும் பரபரப்பில்
சில கண்கள் வெறுப்போடும்,
பல கண்கள் பரிதாபத்தோடும் நாயைக் கடக்கின்றன வெறுமனே பார்த்தபடியே..
மனம் பொறுக்காத அந்தவொரு நொடியில் நீலச் சிலுவையை அழைத்துப் பார்க்கிறேன்..
எடுக்கப்படாத அந்த அழைப்பு தந்த ஒருவித குரூர நிம்மதியோடு இப்போது கடந்து போகிறேன் நானும்!!
கருத்துகள்
கருத்துரையிடுக