முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புடவை அணிந்த பட்டாம்பூச்சி🦋💙

ஆண்டு முழுதும் சுடிதார் தேவதையாய் சுற்றி திரிந்த அவளுக்கு,
திடீரென ஓர் ஆசை துளிர்விட்டது கடைசி நாளில் புடவை பட்டாம்பூச்சியாய் கல்லூரியை சுற்றிவர..

அலமாரி முழுதும் அரை நாள் தேடித் தேடி தேர்ந்தெடுத்ததில் அம்மாவின் புடவை ஒன்று மயில் கலரில் மாட்டியது..
அதில் ஆரம்பம் எது முடிவு எது என தெரிந்து கொள்ளவே அரை நேரம் தீர்ந்து போயிருந்தது..

அம்மாவின் உதவியோடு அதை ஒருவழியாய் அணிந்து முடிக்கவே அரை யுகம் ஆகிப் போன நிலையில்,
புடவையை அவள் அணிந்து கொள்ள அழகோ அவளை அள்ளிப் பூசிக் கொண்டிருந்தது..

இடை தெரியாமல் மறைக்க தேடினாள் காப்பூசி ஒன்று..
மறு பிறவியென்றால் எப்படியாவது காப்பூசியாய் பிறக்க கடவுளிடம்
வேண்டி கொண்டிருந்தது அவள் வீட்டு கண்ணாடி..

கல்லூரி வாசலை நெருங்க நெருங்க வார்த்தைகள் இதழ் நழுவ,
இடை நழுவிய புடவையை இழுத்து பிடித்தது பூவை அவளின் விரல்கள்..

இல்லாத இடையை வேறு வழியின்றி இறுக்கி பிடித்து கொண்டது அந்த புடவையின் விரல்கள்..

சிறகை மறந்த அந்த வண்ணத்துப்பூச்சி புடவை அணிந்து பொறுமையாக வாசலோரம் வலம் வருவதை காணும் வரை,
கல்லூரியின் கடைசி நாளை எண்ணி எந்த ஆணும் வருத்தப்பட்டதாய் தெரியவில்லை!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!