ஆண்டு முழுதும் சுடிதார் தேவதையாய் சுற்றி திரிந்த அவளுக்கு,
திடீரென ஓர் ஆசை துளிர்விட்டது கடைசி நாளில் புடவை பட்டாம்பூச்சியாய் கல்லூரியை சுற்றிவர..
அலமாரி முழுதும் அரை நாள் தேடித் தேடி தேர்ந்தெடுத்ததில் அம்மாவின் புடவை ஒன்று மயில் கலரில் மாட்டியது..
அதில் ஆரம்பம் எது முடிவு எது என தெரிந்து கொள்ளவே அரை நேரம் தீர்ந்து போயிருந்தது..
அம்மாவின் உதவியோடு அதை ஒருவழியாய் அணிந்து முடிக்கவே அரை யுகம் ஆகிப் போன நிலையில்,
புடவையை அவள் அணிந்து கொள்ள அழகோ அவளை அள்ளிப் பூசிக் கொண்டிருந்தது..
இடை தெரியாமல் மறைக்க தேடினாள் காப்பூசி ஒன்று..
மறு பிறவியென்றால் எப்படியாவது காப்பூசியாய் பிறக்க கடவுளிடம்
வேண்டி கொண்டிருந்தது அவள் வீட்டு கண்ணாடி..
கல்லூரி வாசலை நெருங்க நெருங்க வார்த்தைகள் இதழ் நழுவ,
இடை நழுவிய புடவையை இழுத்து பிடித்தது பூவை அவளின் விரல்கள்..
இல்லாத இடையை வேறு வழியின்றி இறுக்கி பிடித்து கொண்டது அந்த புடவையின் விரல்கள்..
சிறகை மறந்த அந்த வண்ணத்துப்பூச்சி புடவை அணிந்து பொறுமையாக வாசலோரம் வலம் வருவதை காணும் வரை,
கல்லூரியின் கடைசி நாளை எண்ணி எந்த ஆணும் வருத்தப்பட்டதாய் தெரியவில்லை!!
கருத்துகள்
கருத்துரையிடுக