முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிச்ச நேரத்தையும் முத்தமிட்டு கழிக்க தயார்!!

யாரும் அறிந்திடாது,
எவர் கண்ணுக்கும் புலப்படாது,
இத்தனை நாளாய் நினைவின் பேழைக்குள் நீ பொதிந்து வைத்திருந்த வடுவாகிப் போன பழைய காயமொன்றை என்னிடம் திறந்து காண்பிக்கிறாய் முதல் முதலாக..

தழும்பை வருடிக் கொடுப்பதால் எந்த
வலியும் ஆறப்போவதில்லை, எதுவும் மாறப்போவதில்லை - தெரியும் எனக்கு..

இப்போது இங்கே உன்னோடு இருக்கும் நான் அப்போதும் இருந்திருந்தால்  இதனை ஆகவிட்டிருக்க மாட்டேன்.. அது தெரியும் உனக்கு..

அதனை அறிவிக்கத் தான் என்னிடம் அந்த ஆறாத் தழும்பை காண்பிக்கிறாய்..
அதனை ஆமோதிக்கத்தான் இப்போது நான் முத்தமிடுகிறேன் அந்த தழும்பின் மீது..

இதோ என் இதழ்களின் ரேகைகளால் இப்போதைக்கு மூடி விடுகிறேன் அதை.. மீண்டும் வெளித் தெரிவதாய் இருந்தால் சொல், மிச்ச நேரத்தையும் அங்கு முத்தமிட்டே கழிக்கிறேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!