எத்திசையும் நடுங்கிட ஒத்தையிலே போர் புரிந்து, பல தலைகளை கொய்து வந்தவன் அவன்..
ஏனோ வெள்ளைப் பூ அவளின் மீளா மாய வலையில் சிக்கி,
காதல் பித்தம் மொத்தமாய் தலைக்கேறி,
தலை பிய்த்துக் கொண்டு,
பித்தம் நித்தம் குறைய வேண்டி, கள்ளும் பாட்டும் இரத்தமும் சதையும் எனக் கேட்டவன் இப்போது,
காஞ்சியிலே நிற்கிறான் எஞ்சிய அவளின் கொஞ்சம் நினைவுகளோடு!
அவளால் உயிர் விட்டான் என்பது மன்னனின் வரலாற்றில் விழுந்த மண் என ஊர் தூற்றினாலும்,
அவளால் உயிர் விட்டான் என்பதுவே அவனது இத்தனை ஆண்டு காலத்தின் இறுதிபட்ச இன்பமாயும் ஆறுதலாயும் இருந்திருக்கும் அவனுக்கு!!
கருத்துகள்
கருத்துரையிடுக