முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆதித்த கரிகாலன் எனும் காதல் பித்தன்!

எத்திசையும் நடுங்கிட ஒத்தையிலே போர் புரிந்து, பல தலைகளை கொய்து வந்தவன் அவன்..

ஏனோ வெள்ளைப் பூ அவளின் மீளா மாய வலையில் சிக்கி,
காதல் பித்தம் மொத்தமாய் தலைக்கேறி,
தலை பிய்த்துக் கொண்டு,
பித்தம் நித்தம் குறைய வேண்டி, கள்ளும் பாட்டும் இரத்தமும் சதையும் எனக் கேட்டவன் இப்போது,

காஞ்சியிலே நிற்கிறான் எஞ்சிய அவளின் கொஞ்சம் நினைவுகளோடு!

அவளால் உயிர் விட்டான் என்பது மன்னனின் வரலாற்றில் விழுந்த மண் என ஊர் தூற்றினாலும்,

அவளால் உயிர் விட்டான் என்பதுவே அவனது இத்தனை ஆண்டு காலத்தின் இறுதிபட்ச இன்பமாயும் ஆறுதலாயும் இருந்திருக்கும் அவனுக்கு!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!