முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவள்‌ பெயர் ராணி!!

துக்கமணி ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது தேவாலயத்தில்..

கேட்க நாதியற்று இறந்து போன அவள் பெயர் ராணி.. பிச்சைகாரியாய் ரோட்டோரம் செத்து கிடந்தாள்.. காசு கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றியும் அவளை புணர்ந்தவர்கள் யாரையும் காணோம் அங்கு..

முதல் முறை ஓர் இரவு நிம்மதியாய்‌ உறங்குகிறாள்‌ அவள்.. முதல் முறையாய் ஓர் இரவு அழாமல் கடக்கிறது அவளுக்கு, அதோ அடைமழை விடாது பெய்து‌ அழுது தீர்த்துக் கொண்டிருந்தது அவளுக்கும்‌ சேர்த்து..

கண்டும்‌ காணாததை போல் சென்றவர்களில் யாரோ கண்ணியமானவர்கள் நான்கு பேர் தூக்கி செல்கிறார்கள் அவளை.. 

இதோ கடைசி யாத்திரைக்கு போகிறாள் அவள் பல்லக்கு பாடையில் ஒரு ராணியை போல!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!