துக்கமணி ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது தேவாலயத்தில்..
கேட்க நாதியற்று இறந்து போன அவள் பெயர் ராணி.. பிச்சைகாரியாய் ரோட்டோரம் செத்து கிடந்தாள்.. காசு கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றியும் அவளை புணர்ந்தவர்கள் யாரையும் காணோம் அங்கு..
முதல் முறை ஓர் இரவு நிம்மதியாய் உறங்குகிறாள் அவள்.. முதல் முறையாய் ஓர் இரவு அழாமல் கடக்கிறது அவளுக்கு, அதோ அடைமழை விடாது பெய்து அழுது தீர்த்துக் கொண்டிருந்தது அவளுக்கும் சேர்த்து..
கண்டும் காணாததை போல் சென்றவர்களில் யாரோ கண்ணியமானவர்கள் நான்கு பேர் தூக்கி செல்கிறார்கள் அவளை..
இதோ கடைசி யாத்திரைக்கு போகிறாள் அவள் பல்லக்கு பாடையில் ஒரு ராணியை போல!!
கருத்துகள்
கருத்துரையிடுக