வடக்கன்ஸ் வர்றானுங்க.. வடக்கன்ஸ் வர்றானுங்க.. என்று படாத பாடு பட்டு கூப்பாடு போட்டோம்..
இனி கூப்பிட்டாலும் வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டார்கள் அவர்கள்..
அடுத்த ரயிலிலும் ஒரு வேளை வரலாம் மீண்டும் அவர்கள்..
அவர்கள் வருவதெல்லாம் சில வேளை உணவுக்காகவும்,
உடல் உழைத்து கரைந்து உங்களை கரையேற்றி அப்படியே முடிந்தால் கொஞ்சம் அவர்கள் குடும்பங்களையும் கரையேற்றிக் கொள்ளத்தானே!
அதோ அடுத்த ரயிலிலும் வந்துட்டானுங்க வடக்கன்கள் என்பீர்கள்..
வந்துவிட்டுத்தான் போட்டும் விடுங்களேன்!
வடக்கன்கள் என்ன! வந்தேறிகள் என்ன!
நீங்கள் என்ன, நானென்ன!
எல்லாம் ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களில் கண்ணிமைத்து திறக்கும் பொழுதில் நடந்து விடுகிறது..
வடக்கன்கள் இங்கே பிழைப்புக்காக வருவாதானால் வரட்டுமே..
வாழத்தானே இந்த வாழ்க்கை!
எப்படியாயினும் எதுவாயினும் வாழத்தானே எல்லாமே..
அலைந்து திரிந்து அலைக்கழிந்து இறுதியில் எல்லாமே இந்த அரைஞாண் வயிற்றுக்குத்தானே..
அதே வயிறுதானே அவர்களுக்கும்,
வாழுந்து விட்டுத்தான் போட்டுமே!!
கருத்துகள்
கருத்துரையிடுக