முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்துட்டுதான் போட்டுமே!!

வடக்கன்ஸ் வர்றானுங்க.. வடக்கன்ஸ் வர்றானுங்க.. என்று படாத பாடு பட்டு கூப்பாடு போட்டோம்..

இனி கூப்பிட்டாலும் வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டார்கள் அவர்கள்..

அடுத்த ரயிலிலும் ஒரு வேளை வரலாம் மீண்டும் அவர்கள்..
அவர்கள் வருவதெல்லாம் சில வேளை உணவுக்காகவும்,
உடல் உழைத்து கரைந்து உங்களை கரையேற்றி அப்படியே முடிந்தால் கொஞ்சம் அவர்கள் குடும்பங்களையும் கரையேற்றிக் கொள்ளத்தானே!

அதோ அடுத்த ரயிலிலும் வந்துட்டானுங்க வடக்கன்கள் என்பீர்கள்..
வந்துவிட்டுத்தான் போட்டும் விடுங்களேன்!
வடக்கன்கள் என்ன! வந்தேறிகள் என்ன!
நீங்கள் என்ன, நானென்ன!
எல்லாம் ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களில் கண்ணிமைத்து திறக்கும் பொழுதில் நடந்து விடுகிறது..

வடக்கன்கள் இங்கே பிழைப்புக்காக வருவாதானால் வரட்டுமே..
வாழத்தானே இந்த வாழ்க்கை!
எப்படியாயினும் எதுவாயினும் வாழத்தானே எல்லாமே..
அலைந்து திரிந்து அலைக்கழிந்து இறுதியில் எல்லாமே இந்த அரைஞாண் வயிற்றுக்குத்தானே..
அதே வயிறுதானே அவர்களுக்கும்,
வாழுந்து விட்டுத்தான் போட்டுமே!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!