உடைந்து போன என்னை ஒட்ட வைக்க உன்னால் மட்டுமே முடியுமென என்னை ஏந்தியபடி ஓடிவந்து வெகுநேரமாக காத்திருக்கிறேன் உனக்காக..
முன்பெல்லாம் எத்தனை கஷ்டமென்றாலும் எப்படியேனும் மெனக்கெட்டு என்னை நானே சரிசெய்து கொள்வேன் கொஞ்சம் கொஞ்மாக..
'எப்போது உடைந்தாலும் என்னை கூப்பிடு அல்லது இங்கு வா நான் இருக்கிறேன்' என்று நீ சொன்ன பின்பு,
சிறு கீறலுக்குக் கூட இப்போதெல்லாம் உன்னை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்!!
கருத்துகள்
கருத்துரையிடுக