முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயென் வரமா சாபமா..

மேல் பொழியும் மழையை,
இரவு நிரப்பும் நிலவை,
ஓயாத அந்த கடலை,
குறையாத இந்த காற்றை,
அசைய மறுக்கும் மலைகளை,
ஆசை காட்டி மறையும் நட்சத்திரங்களை,
சில நல்லவைகளை பல கெட்டவைகளை என எதையுமே உன் நினைவு வராமல் ரசிக்க முடியவில்லை இப்போதெல்லாம்!!

இது பிடிக்கிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை எனக்கு!!

நீ என் வரமா சாபமா புரியவில்லை.. எதுவாயினும் அது நீயாயிற்றே!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!