நீ தின்று வீசிய சாக்லேட் கவர்;
உன் கூந்தல் ஏறி உதிர்ந்த ரோஜா இதழ்;
நீ கடித்துக் கடித்தே கலரும் வடிவமும் மாறிப் போன அந்த பேனா மூடி;
உன் பெஞ்ச்சில் நான் கிறுக்கிய நமது பெயர்;
உனக்குத் தெரியாமல் உன்னிடமிருந்து நான் உறுவிய உன் பூப்போட்ட கைக்குட்டை;
இவற்றுக்கெல்லாம் சொன்ன, இன்னமும் சொல்லிக் கொண்டேயிருக்கும் என் காதலை,
ஏனோ உன்னிடம் தான் மறந்து போனேன் இறுதிவரை சொல்ல!!
கருத்துகள்
கருத்துரையிடுக