அங்குமிங்கும் அறைக்குள் எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கையில் சட்டென்று சிக்கியது அலமாரிக்குள் ஆழ்ந்து போன புத்தகம் ஒன்று..
புத்தகத்தை தூசு தட்டுகையில் எனக்குள்ளும் ஞாபகப் புழுதி கிளம்புகிறது மெல்ல..
தானாய் கை தேடிச் சென்றடைந்த இடம் மூன்றாம் பக்கத்தில் காகிதத்தோடு காகிதமாய் பதிந்து போன அவளது கையொப்பம்..
கோணலான கையெழுத்து தான் அவளுக்கு, அவளைப் போலவே அதுவும்..
இருந்தும் அச்சிட்ட எழுத்துக்கள் கூட அவள் பெயருக்கு அருகினில் நிற்க முடியாது..
எதையோ தேடத் தொடங்கிய நான் அவளின் அந்த கையெழுத்துக்குள் என்னை தொலைக்க தொடங்குகிறேன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக..
என்ன செய்யட்டும்.. சில விஷயங்களை எவ்வளவு முயன்றாலும் முற்றிலுமாக அழிக்கவோ, மறைக்கவோ முடிவதில்லையே..
எங்கு தேடிப் போய் நீங்கள் எப்படி ஒளிந்து கொண்டாலும் அந்த ஞாபகச் சிறகுகள் காற்றில் படபடத்துக் கொண்டே தான் கிடக்கின்றன!!
கருத்துகள்
கருத்துரையிடுக