முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்படிக்கு, எங்கிருந்தோ ஓர் ஜன்னலோரவாசி!!

சொந்தமாய் ஒரு வீடு என்பதெல்லாம் பெரும்பான்மையானோரின் பேராசைக் கனவாகிப் போயிருக்கையில்,

ஒருவேளை கனவுகள் தாண்டி கற்கள் கொண்டும் வீடு கட்டுவதாக இருந்தால் தயவுசெய்து பெரியதொரு ஜன்னல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்..

உங்கள் கேசம் கலைத்துப் போட்டு விளையாட காற்றோட்டம் அங்கிருக்கும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்..

உங்களுக்கென ஒரு ஜன்னலோரம் இருப்பின் உலகின் எந்தவொரு துயரையும் நீங்கள் கடந்துவிடலாம் அல்லது மறந்துவிடலாம் என்பதற்கு,
தாய் மடியென அதன் கம்பிகளில் தலை சாய்த்து தன்னைத் தொலைத்தோர் ஏராளம் சாட்சியுண்டு..

ஒரே ஒரு நிபந்தனை,
அந்த ஜன்னலை சாத்திவிட்டு
மீண்டும் திறப்பதற்கு முன் மனம் விட்டு
அழுதிருப்பது மட்டும் முக்கியம்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

இப்போதைய ஆறுதல்!!

என் தனிமையில் இங்கு நீயிருப்பது போல, உன் தனிமையிலும் அங்கு நானிருக்கலாம் என்றொரு ஆசையும், நினைப்புமே இப்போதைய எனக்கான ஆறுதல்!!

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!