முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கிடைக்குமா ஒருமுறையேனும்??

இந்த தூரங்களையும் தடைகளையும் கடந்து, ஓடி வந்து உன் கைகளுக்குள் பத்திரமாய் சேர்ந்து, கொஞ்ச நேரமேனும் இந்த உலகம் மறந்து உறங்கிப் போக வேண்டும்!!

Company Calls கடுப்புகள் 🤦🏻‍♂️

இதோ இந்த அலைபேசி இசைத்திட நீதானோ என்று ஓடி வருகிறேன் ஆவல் அடங்காமல்.. மின்னல் வெட்டி, மின்சாரமாய் பரவி, வானவில் நிற வண்ணத்துப்பூச்சிகள் வயிற்றினுள் வட்டமடித்து மேலேறி வரும் வேளையில், அவற்றை வெறும் கரும்புகையாகி கக்க விடுகிறான் இந்த கம்பெனிக்காரன்!!

பலவீனமாகி விட்டேன் நான்🚶🏻‍♂️

வழக்கமாக கீறுகிற அதே கத்திதான் கீறுகிறது‌ இன்றும்.. வழக்கமாக படுகிற அதே இடத்தில்தான் பட்டு வலிக்கிறது.. இந்நேரம் பழகியிருக்கவேண்டும் தான், இருந்தும் ஏனோ சில நாட்களில் வழக்கத்தைவிட அதிகமாக வலி கொடுத்து ரத்தம் கசிகிறது.. கொஞ்சம் பலவீனமாகிவிட்டேன் போலும் நான்🚶🏻‍♂️

அவள்‌ பெயர் ராணி!!

துக்கமணி ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது தேவாலயத்தில்.. கேட்க நாதியற்று இறந்து போன அவள் பெயர் ராணி.. பிச்சைகாரியாய் ரோட்டோரம் செத்து கிடந்தாள்.. காசு கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றியும் அவளை புணர்ந்தவர்கள் யாரையும் காணோம் அங்கு.. முதல் முறை ஓர் இரவு நிம்மதியாய்‌ உறங்குகிறாள்‌ அவள்.. முதல் முறையாய் ஓர் இரவு அழாமல் கடக்கிறது அவளுக்கு, அதோ அடைமழை விடாது பெய்து‌ அழுது தீர்த்துக் கொண்டிருந்தது அவளுக்கும்‌ சேர்த்து.. கண்டும்‌ காணாததை போல் சென்றவர்களில் யாரோ கண்ணியமானவர்கள் நான்கு பேர் தூக்கி செல்கிறார்கள் அவளை..  இதோ கடைசி யாத்திரைக்கு போகிறாள் அவள் பல்லக்கு பாடையில் ஒரு ராணியை போல!!

அந்த காலத்து School Love♥️

ஐந்தாறு மாதங்கள் போராடி அடித்து பிடித்து எப்படியோ Attendance register-இல் இருந்து அவள் தொலைப்பேசி எண்ணை தேடிக் கண்டுபிடித்து எடுத்து, 'எப்ப call பண்ணிணா அவ எடுப்பா, அவள் குரல் கேட்டாலே போதும்' என எண்ணியபடி, அலைபேசியில் அந்த எண்களை அழுத்தும் போது மனதில் எழும் அந்த என்னவென்றே தெரியாத உணர்வு சங்கமம் தான் அப்போதைய பள்ளிக் காதலின் இலக்கணம்!

எரிகிறது என் ஆன்மா!!

இந்த பின் அந்தி இரவுகளில் உன் நினைவுகளை போர்த்தியபடி நான்‌ மட்டும் கிடக்கிறேன்‌ இங்கே.. நீ இட்டு போன ஒவ்வொரு முத்தத்தின் உஷ்ணத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது என் ஆன்மா!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!