இந்தப் பிரிவு போதுமானதாக இல்லை நம் காதலுக்கு...
இன்னும் பிரிந்து போவோம், தொலைந்து போவோம்
மிக தூர தூரமாய்..
உன் தூது எதுவும் என்னை சேர முடியாத தூரம், என் நினைவுகள் நினைத்தாலும் உன்னை அடைய முடியாத தூரம்..
நான் யாரென்று நீ மறந்து போகின்ற தூரம், நீ யாரென்றே நான் அறியாது போகின்ற தூரம்..
இவ்வாறு மிக மிக தூரங்கள் பயணித்துக் களைத்த பிறகு, இளைப்பாற எங்கேனும் இப் பிரபஞ்ச பெருவெளியில் மீண்டும் ஒரு மரத்தடி நிழலிலோ, மலையடிவாரத்திலோ முதல் முறை சந்திப்பது போல் சந்தித்து கொள்வோம் வா..
மீதி அத்தியாயங்களை எல்லாம் அதன் பிறகான காதலில் எழுதிக் கொள்ளலாம் !!
💖💖
பதிலளிநீக்கு